Connect with us

Raj News Tamil

கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது : 300 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

தமிழகம்

கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது : 300 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் தனிபடை போலீசார் கள்ள சாராயம் ஒழிப்பு நடவடிக்கையை தீவிர படுத்தி உள்ளனர்

இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த ராக்கோடு பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சிறப்பு படை அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கருமந்துறை ராக்கோடு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் அவரது விவசாய தோட்டத்தில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 150 லிட்டர் கொண்ட 300 பாக்கெட் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சாராயம் விற்பனை செய்து வந்த செல்வம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தனிப்படை போலீசார் கருமந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் சாராயம் விற்கப்படும் தகவல் தெரிவித்தால் தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top