இந்தியா
மனைவியின் சடலத்துடன் உடலுறவு கொண்ட கணவன்! அதிர்ச்சி சம்பவம்!
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார். 38 வயதாகும் இவருக்கு, ரத்னவள்ளி என்ற மனைவி உள்ளார். கேரள மாநிலத்தில் வசித்து வரும் மகேஷ் குமார், அங்குள்ள தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரத்னவள்ளிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த நபருக்கும் இடையே, தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மகேஷ் குமார், தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் தகாத உறவை நிறுத்திக்கொள்ளாத ரத்னவள்ளி, தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ளாத மகேஷ் குமார், தனது மனைவியை கொலை செய்துவிட்டு, உடலை தோட்டத்தில் வீசியுள்ளார். மேலும், மனைவியை கொலை செய்த பின், சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மகேஷ் குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொன்றுவிட்டு, சடலத்துடன் கணவன் உடலுறவு கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login