தமிழகம்
விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சா் பெரியகருப்பன் ! 1500 கோடிவரை வட்டியில்லா கடன்..!
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயப் பணிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் கடன்பெறும் விவசாயிகள் அதனைச் சாகுபடி முடிந்தவுடன் எட்டுமாத காலம்வரை வட்டியில்லாமல் அந்தக்கடனை திருப்பிச் செலுத்தலாம்.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ரூபாய் 1500 கோடி வரையிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளாா்.
இந்த வட்டியில்லா கடன், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் .மேலும் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதனைத்தொடா்ந்து,கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி அவர்கள் பயனடையலாம். வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.