அரசியல்
நாகலாந்தின் முதல்வராக 5-வது முறையாக பதவியேற்ற நெய்பியு ரியோ
நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த பிப்.,27 ல் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ம் தேதி எண்ணப்பட்டது. இதில் பா.ஜ.. 12 இடங்களிலும் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி 25 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து என்.டி.பி.பி கட்சியை சேர்ந்த நெய்பியுரியோ 5 வது முறையாக முதல்வராக பதவியேற்பது உறுதியானது. இந்நிலையில் நாகாலாந்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 5-வது முறையாக நெய்பியு ரியோ முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment Login