Connect with us

Raj News Tamil

பெண் ஊழியர்களுக்கு மத்திய அரசின் புதிய அறிவிப்பு..!

இந்தியா

பெண் ஊழியர்களுக்கு மத்திய அரசின் புதிய அறிவிப்பு..!

அரசு பெண் ஊழியர்கள் உயிரிழந்தால் கணவருக்குப் பதிலாக குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

அதன்படி அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு கணவருக்கு பதிலாக தனது குழந்தைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமனம் செய்யலாம்.
இது குறித்து தங்களின் அரசு துறைத் தலைவரிடம் அவர்கள் எழுத்து மூலமாக எழுதித் தர வேண்டும்.

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு வேளை அவரது குழந்தை மைனராக இருந்தாலோ, மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில் கணவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

அந்த குழந்தை உரிய வயதை அடைந்தவுடன் அந்தக் குழந்தைக்கே ஓய்வூதியம் அளிக்கப்படும். உயிரிழந்த பெண் ஊழியரின் குழந்தை தகுதிநிலையை எட்டாவிட்டாலும், குழந்தைகளுக்கே ஓய்வூதியம் வழங்கப்படும்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top