Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பேரவையில் சிரிப்பலை; செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த துரைமுருகன்!

அரசியல்

பேரவையில் சிரிப்பலை; செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த துரைமுருகன்!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு, அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளதாக கிண்டலாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கேள்வி நேரத்தில், மதுரை சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, “முந்தைய ஆட்சியில் ரூ. 1,296 கோடியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெறும் அந்தப் பணியை விரைவுபடுத்த வேண்டும். தற்போது சாக்கடை நீர் கலந்து வருகின்றது. 24 மணிநேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “இந்த திட்டத்தை தொடங்கிவிட்டு முந்தைய ஆட்சியில் கிணறு தோண்டுவதற்கான அனுமதியை வனத்துறையிடம் வாங்காமல் இருந்தனர். தற்போது நாங்கள்தான் அனுமதி பெற்று பணிகளை தொடங்கியுள்ளோம். மேல்நிலைத் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் மதுரைக்கு விரைவில் வழங்குவோம்.” என்றார்.

அப்போது குறுக்கீட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். எனவே கவலைப்பட வேண்டாம் என கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

More in அரசியல்

To Top