Connect with us

Raj News Tamil

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞர்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 14 எம்.பிக்கள் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, பதாகைகளை ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More in இந்தியா

To Top