Connect with us

Raj News Tamil

சிவகங்கையில் விபரீதம்: பனைமரம் விழுந்து 2 வீடுகள் சேதம்! காற்று தான் காரணமா ?

தமிழகம்

சிவகங்கையில் விபரீதம்: பனைமரம் விழுந்து 2 வீடுகள் சேதம்! காற்று தான் காரணமா ?

காரைக்குடியில் காற்றின் காரணமாக குருந்தம்பனை மரம் சாய்ந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் இடிந்து சேதம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்தும் , தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.இதனால், அங்கே குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் காரைக்குடி காந்திபுரம் மேட்டு தெரு பகுதியில் காற்று வீசியதில் அப்பகுதியில் அருகில் இருந்த குருந்தம்பனைமரம் வீரமுத்து என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்ததில் சுவர் இடிந்து சேதம் ஏற்பட்டது அதே போல அருகில் உள்ள வீட்டிலும் விழுந்ததில் இடிந்து சேதம் ஆனது.

நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில்,வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்தும், சேத விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top