தமிழகம்
சரிவர மூடப்படாத பைப்லைன் வால்வு – நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
கோவில்பட்டி பாரதிநகர் சாலையில் பைப் லைன் வால்வு மூடி சரிவர மூடப்படாததால் அடிக்கடி ஏற்படும் விபத்து ஏற்படுவதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு பாரதி நகர் பகுதியில் இரண்டாவது பைப் லைன் திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பைப்லைன் குழாய் மேல் பகுதியில் சரி வர மூடப்படாததால் அவ் வழியாக செல்லும் மக்கள் சிறுவர்கள் குழந்தைகள் கால் இடறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது..
இது குறித்து கோவில்பட்டி நகர் மன்ற கூட்டத்தின் வாயிலாக நகர மன்ற உறுப்பினர் கவியரசன் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.
You must be logged in to post a comment Login