தமிழகம்
ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்கு வந்த மனைவி.. வரும் வழியில் பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..
நெல்லை மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள். அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் இவர், கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவர் பாலசுப்பிரமணியனை பிரிந்து, வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று பணி முடிந்ததும் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த பாலசுப்பிரமணியன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் உச்சகட்ட கோபம் அடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அய்யம்மாளை கடுமையாக தாக்கினார்.
மேலும், பெட்ரோலை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி, எரித்து கொலை செய்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, கொலை செய்ததை ஒத்துக் கொண்ட பாலசுப்பிரமணியன், காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login