தமிழகம்
வற்புறுத்திய காதலி.. பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூஜா. 19 வயதான இவர், பெற்றோர் இறந்துவிட்டதால், தனது மாமாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். பனியன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு சென்று வந்த பூஜா, லோகேஸ்வரன் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஓராண்டுகளாக பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, லோகேஸ்வரன் பூஜாவை புறக்கணித்துள்ளார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு, அந்த பெண் லோகேஸ்வரனை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
இதனால் பூஜாவை கொலை செய்ய முடிவு எடுத்த அவர், பனப்பாளையம் அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு, அந்த பெண்ணை கல்லால் கடுமையாக அடித்த லோகேஸ்வரன், பின்னர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை, பூஜா மீது ஊற்றி, எரித்துள்ளார்.
இதில், அலறித் துடித்த அந்த பெண்ணை, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், லோகேஸ்வனை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login