தமிழகம்
புகார் அளிக்க வந்த பெண்.. புகாரை கவனிக்காமல் பெண்ணை கவனித்த SI.. தட்டி தூக்கிய SP..
கோவில்பட்டி அருகே, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை உதவி ஆய்வாளர், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாதிக்குளம் காவல்நிலையத்தில், இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்திருந்தார். அந்த புகார் மனுவில், தன்னுடைய செல்போன் எண்ணையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் சுதாகர், அந்த பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். செல்போனில் அழைப்பு விடுத்து இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார்.
இதனால், பொறுமையிழந்த அந்த பெண், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், உதவி ஆய்வாளர் சுதாகரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment Login