Connect with us

Raj News Tamil

காதலர்களுடன் திருவிழா சென்ற 2 பெண்கள்.. விடிய விடிய சீரழித்த 4 இளைஞர்கள்.. பகீர் சம்பவம்..

தமிழகம்

காதலர்களுடன் திருவிழா சென்ற 2 பெண்கள்.. விடிய விடிய சீரழித்த 4 இளைஞர்கள்.. பகீர் சம்பவம்..

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). 19 வயதான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதேபோல், மீனாட்சியின் சகோதரியும், அதே பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மீனாட்சியும், அவரது சகோதரியும், தங்களது காதலர்களுடன், கோவில் திருவிழா ஒன்றிற்கு சென்றுள்ளனர். கோவில் திருவிழா முடிந்த பிறகு, மீண்டும் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தபோது, அவர்களை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர்.

பின்னர், மீனாட்சி, அவரது சகோதரி, அவர்களது காதலர்கள் இரண்டு பேரையும், அந்த மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர், காதலர்கள் இரண்டு பேரையும் கட்டிப்போட்ட அந்த மர்ம நபர்கள், தங்களது இன்னொரு கூட்டாளியை அழைத்துவிட்டு, மீனாட்சி மற்றும் அவரது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அன்று இரவு முழுவதும், அந்த 4 பேரும் சேர்ந்து, மீனாட்சியையும், அவரது சகோதரியையும் தொடர்ச்சியாக சீரழித்தனர். மறுநாள் விடிந்த பிறகு, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்த பிறகு, மீனாட்சி, அவரது சகோதரி, 2 காதலர்கள் ஆகியோர், அங்கிருந்து தப்பித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அதில், சரண்குமார் (21), வினோத்குமார் (26), சூரியபிரகாஷ் (22), பிரச்சன்னகுமார் ஆகிய 4 பேர் தான், இந்த குற்றத்தை செய்துள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 3 பேரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சூரிய பிரகாஷை தேடி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top