Connect with us

Raj News Tamil

மது போதைக்கு அடிமையான கணவன்: கடப்பாரையால் அடித்து கொலை செய்த மனைவி!

தமிழகம்

மது போதைக்கு அடிமையான கணவன்: கடப்பாரையால் அடித்து கொலை செய்த மனைவி!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40) வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பாண்டீஸ்வரி (33) மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளது.

மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையில் இருந்ததாகவும் இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே அதிக மது போதையில் இருந்த ராஜேந்திரன் மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்து, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதிகாலை ராஜேந்திரன் தனது மனைவியை கடப்பாரை கொண்டு தாக்க முயன்ற போது தன்னை தற்காத்துக் கொள்ள மனைவி பாண்டீஸ்வரி கடப்பாரையை பிடுங்கி கணவரை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த பாண்டீஸ்வரி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top