Connect with us

Raj News Tamil

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி!

சினிமா

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி!

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் டி.எஸ்.பி.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய தோல்வி கொடுத்த இயக்குநருடன், மீண்டும் விஜய்சேதுபதி இணைய இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆனால், விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவந்துள்ளது.

அதாவது, இந்த திரைப்படத்திற்கு, இயக்குநர் வெற்றிமாறன் தான், கதை, திரைக்கதை எழுத உள்ளாராம். திரைப்படத்தை இயக்குவது மட்டும் தான், பொன் ராம் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக தான், விஜய்சேதுபதி இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளார்.

More in சினிமா

To Top