தமிழகம்
ஓசூரில் கர்ப்பிணி மனைவி மற்றும் கணவன் தற்கொலை!
ஓசூரில் கர்ப்பிணி மனைவி மற்றும் கணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து சிப்காட் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் மேலூரை சேர்ந்த விஜயகுமார் (27), இவரது மனைவி சந்தியா (23), இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டு, ஓசூர் பேகப்பள்ளியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
தற்போது சந்தியா 9 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். மேலும் விஜயகுமார் ஒரு ஐடி கம்பெனியில் பணி செய்துகொண்டே, ஆன்லைன் டிரேடிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அதில் பணம் இழப்பு ஏற்பட்ட விரக்தியில் இருந்த விஜயகுமார், நேற்று முன்தினம் இரவு அவரது மனைவியும் தூங்க சென்றார்.
நேற்று மாலை வரை அவர்கள் தூங்கியிருந்த அறையின் கதவு திறக்காததால், சந்தியாவின் தாய் திலகவதி கதவை திறந்த பார்த்த போது, விஜயகுமார் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.