இந்தியா
புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் : வாகன விபத்தில் 57-க்கும் மேற்பட்டோர் காயம்..!
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி 57-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டனர். புத்தாண்டு பிறக்கும் உற்சாகத்தில் நள்ளிரவில் மதுபோதையில் இளைஞர்கள் தாறுமாறாக இருசக்கர வாகனங்களில் நகர சாலைகளில் வலம் வந்தனர். சிலர் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இந்லையில் கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அந்த வகையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 28 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 21 பேரும், கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர தனியார் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்றதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login