இந்தியா
சொல்லுங்க தமிழ் மியூசிக் சொல்லுங்க.. புதுச்சேரியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சில நாட்களுக்கு முன்பு ஹாலோகிராம் மோசடியில் ஈடுபட்டு பூட்டப்பட்ட மதுபான தொழிற்சாலையில் பெண்கள் அதிகளவு பணியாற்றி வந்ததால், பொதுமக்கள் நலன் கருதி திறக்கப்பட்டது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நகர பகுதி முழுவதும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில் சீல் வைக்கப்பட்ட மதுபான தொழிற்சாலையில் ஊழியர் நலனுக்காக அனுமதி அளித்தேன் என்று தெரிவித்ததற்கு அப்ப 3 கோடி பணம் வாங்கியது பொய்யாக்கா? என கேள்வி எழுப்பிய நிலையில் மூடப்பட்ட பஞ்சாலை, பாப்ஸ்கோ, பாசிக் , ரேஷன் கடை ஊழியர்கள் நாசமாக போகலாமா ? சொல்லுங்க தமிழ் மியூசிக் சொல்லுங்க என கேள்வி எழுப்பிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment Login