அரசியல்
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment Login