Connect with us

Raj News Tamil

அமைச்சர் மகன், பேரன் மீது தாக்குதல்!

சினிமா

அமைச்சர் மகன், பேரன் மீது தாக்குதல்!

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம், ஜிகர்தண்டா 2. இந்த திரைப்படம், உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தை காண்பதற்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கத்திற்கு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராசச்சந்திரனின் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

அப்போது, அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்புறம், 3 பெண்கள், 3 ஆண்கள் கொண்ட கும்பலும், படம் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், அந்த 6 பேரும், தியேட்டரில் அதிக சத்தம் எழுப்பி, ஆரவாரம் செய்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த அமைச்சரின் மகனும், பேரனும், தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில், அந்த 6 பேர் கொண்ட கும்பல், அமைச்சர் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது, தேனாம்பேட்டை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in சினிமா

To Top