Connect with us

Raj News Tamil

புறாவை பிடிக்க முயன்ற சிறுவன் பலி!

தமிழகம்

புறாவை பிடிக்க முயன்ற சிறுவன் பலி!

புறாவை பிடிக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.

சென்னை அடுத்த உள்ள எழில் நகர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மாடியில் நின்று கொண்டு புறாவை பிடிக்க முயன்ற குட்டி(15) என்ற சிறுவன் கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தனர்.

பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருவதாகவும் இவருடன் யார், இருந்தார்கள் என்பது குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கின.

More in தமிழகம்

To Top