Connect with us

Raj News Tamil

தாய், மகனைக் கொன்று பெட்டியில் அடைத்த கொடூர சம்பவம்!

இந்தியா

தாய், மகனைக் கொன்று பெட்டியில் அடைத்த கொடூர சம்பவம்!

தாய், மகனைக் கொன்று பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நீலிமா கணேஷ் (45). இவரது மகன் ஆயுஷ் (22). ஆகியோர் வீட்டிற்கு நாக்பூர் இருந்து உறவினர்கள் சென்று இருந்தனர். அங்கு வீடு பூட்டி இருந்த நிலையில் துர்நாற்றம் வீசியது இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூட்டியிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் ரத்தம் வழிந்திருந்தது. அத்துடன் கடுமையான துர்நாற்றம் வீசியது. அங்கு கட்டிலுக்கு அடியில் உள்ள இரகசிய பெட்டியை போலீசார் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

பெட்டியில் நீலிமா கணேஷ், ஆயுஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுக் இருந்தனர். இவர்களின் உடல்களை போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீலிமா கணேஷின் மூத்த மகனைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவர் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தாய், மகனைக் கொன்று பாக்ஸில் அடைக்கப்பட்ட சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top