Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி வெட்டி படுகொலை

இந்தியா

கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி வெட்டி படுகொலை

புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி முகிலன். இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சித்தரசூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி தலை சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லிக்குப்பம் போலீசார் வெட்டி கொலை செய்யப்பட்ட முகிலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரியில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள முகிலன் மது குடிக்கும் போது ஏற்பட்ட பழக்கத்தில் சித்தரசூர் பகுதியை சார்ந்த நபர் ஒருவரின் பாதுகாப்பில் கடந்த 3 தினங்களாக அதே பகுதியில் தங்கி இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று முகிலன் உட்பட சிலர் சித்தரசூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் மது அருந்த சென்ற போது அங்கு வந்த மர்ம கும்பல் சரமாரியாக முகிலனை வெட்டி அங்கிருந்து தப்பியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் காவல்நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் விக்கி (எ) விக்னேஷ், கணபதி, புவனேஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top