Connect with us

Raj News Tamil

மகளை துன்புறுத்திய வாலிபரை படுகொலை செய்த தந்தை!

இந்தியா

மகளை துன்புறுத்திய வாலிபரை படுகொலை செய்த தந்தை!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அசோக் நகரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரின் மகளும் டேவிட் என்ற இளைஞனரும் பழகி வந்துள்ளனர். அவ்வப்போது தாங்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை டேவிட் துன்புறுத்தி வந்துள்ளான்.

மனமுடைந்த அந்த பெண் தனது தந்தையான மஞ்சுநாத்திடம் இதுகுறித்து கூறியுள்ளார். இந்த நிலையில், டேவிட்டை வீட்டிற்கு அழைத்த மஞ்சுநாத் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை கேட்டுள்ளார்
ஆனால், டேவிட் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மஞ்சுநாத் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டேவிட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மஞ்சுநாத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top