Connect with us

Raj News Tamil

விளையாடிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த கபடி வீரர்..!

தமிழகம்

விளையாடிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த கபடி வீரர்..!

புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுபட்டியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (19). கபடி வீரரான இவர், பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த கபடி போட்டியில் யோகேஸ்வரன் கலந்து கொண்டு விளையாடினார்.

அப்போது மைதானத்திலேயே திடீரென யோகேஸ்வரன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement

More in தமிழகம்

To Top