Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தகாத உறவைத் தட்டிக்கேட்ட தங்கையின் 6வயது மகனை கொன்ற அக்கா..!

இந்தியா

தகாத உறவைத் தட்டிக்கேட்ட தங்கையின் 6வயது மகனை கொன்ற அக்கா..!

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபுரம் மாவட்டம், முத்துகடஹள்ளிக் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவர் கப்பன் பார்க்கில் ஒரு குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கப்பன் பார்க் போலீஸார், அந்த பெண்ணை பெரேசந்திரா போலீஸில் ஒப்படைத்தனர்.

அம்பிகாவிடம் விசாரணை நடத்திய போது, தனது தகாத உறவை தங்கை அனிதா தட்டிக் கேட்டதால் அவரைப் பழிவாங்குவதற்காக அவரது 2 குழந்தைகளைக் கடத்தி வந்ததாவும், அதில் ஒரு குழந்தையை கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார்.

அம்பிகாவை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவைத் தட்டிக் கேட்ட தங்கையின் 6வயது மகனைக் கொன்று புதைத்த சம்பவம் பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top