Connect with us

Raj News Tamil

சொர்க்கவாசல் திறப்பின்போது தலைகீழாக கவிழ்ந்த சாமி சிலை..பக்தர்கள் அதிர்ச்சி

தமிழகம்

சொர்க்கவாசல் திறப்பின்போது தலைகீழாக கவிழ்ந்த சாமி சிலை..பக்தர்கள் அதிர்ச்சி

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இந்நிலையில் பென்னாகரம் அருகே உள்ள ஆளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாமி சிலையை சொர்க்க வாசல் வழியாக கொண்டு வந்தபோது பக்தர்கள் சிலையை தோளில் வைத்து ஊஞ்சலில் ஆடுவதுபோல் அசைத்தனர்.

இதனால் சாமி சிலை தலைகீழாக குப்புறக் கவிழ்ந்தது. இதனால் சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு, பெருமாள் சிலை தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு மீண்டும் முறைப்படி சாமி சிலை வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு உரிய முறையில் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது.

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top