Connect with us

Raj News Tamil

படம் பார்க்க வந்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய தியேட்டர் ஊழியர்கள் கைது

தமிழகம்

படம் பார்க்க வந்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய தியேட்டர் ஊழியர்கள் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி (29). இவர் நவ. 16-ம் தேதி இரவு சிதம்பரத்தில் ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அப்போது திரையரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவியிடம் மது பாட்டில் உள்ளதா என சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் திரையரங்கு ஊழியர்கள் அரவிந்தன், சுகந்தன், ராகுல், மாதவன் உள்ளிட்டோர் சேர்ந்து சிரஞ்சீவி மற்றும் அவரது அண்ணன் பழனிசாமி, ராமராஜன் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த சிரஞ்சீவி, பழனிசாமி, ராம ராஜன் ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து சிரஞ்சீவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிதம்பரம் போலீசார் திரையரங்கு ஊழியர்களான ராகுல் (22), அரவிந்தன் (38), சுகுந்தன் (22), மாதவன் (22) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

More in தமிழகம்

To Top