Connect with us

Raj News Tamil

80 அடி டவரில் ஏறி கொலை மிரட்டல் ! போலீஸ் தான் காரணமா ?

தமிழகம்

80 அடி டவரில் ஏறி கொலை மிரட்டல் ! போலீஸ் தான் காரணமா ?

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்(45). இவர் தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். ஆனால், இதன் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இதனைக் கண்டிக்கும் விதமாக இன்று காலை ராமானுஜம் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தின் 80 அடி உயர செல்போன் டவர் மீது ஏறினார்.

சுமார் 15 அடி உயரத்தில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.இத்தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினரும், அவரின் உறவினர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் கீழே இறங்கி வர மறுத்ததார். இதையடுத்து, தீயணைப்பு துறை வீரர்கள் ஏணியை போட்டு ஏறி அவரின் இடுப்பில் கயிற்றை கட்டி வலுக்கட்டாயமாக மீட்டனர்.

அத்துடன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top