உலகம்
ட்விட்டர் பயனர்களுக்கு ஷாக்…இனி 500 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும்!
கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்கினார்.
இந்நிலையில் ட்விட்டரில் அதிரடியான சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ட்விட்டரில் அங்கீகரிக்கப்ட்ட (Verified Account) ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளை பார்க்கலாம்.
பிற பயனர்கள் ஒரு நாளைக்கு 1000 பதிவுகளை பார்க்கலாம். புதிய பயனர்கள் வெறும் 500 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக இந்த கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login