Connect with us

Raj News Tamil

கல்லை கண்டா நாய காணோம், இப்போ விடாமுயற்சியே காணோம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

கல்லை கண்டா நாய காணோம், இப்போ விடாமுயற்சியே காணோம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கிற படமாக விடாமுயற்சி இருந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி அஜர்பைஜானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் உண்மையாகவே தொடங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதாவது, படப்பிடிப்பு நடக்கவிருந்த அஜர்பைஜான் நாட்டில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் நிகழ்ந்து வருவதால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் விடாமுயற்சியின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. ஒரு வழியாக படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது என்று நினைத்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top