சினிமா
AK 62 பட சர்ச்சை.. விலகியதற்கு கடவுளுக்கு நன்றி? – பரபரப்பை ஏற்படுத்தும் விக்னேஷ் சிவன் பதிவு..
அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அவர் படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது, அஜித்தின் அடுத்த படத்தை, மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!!
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!”
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர், அஜித் படத்தில் இருந்து விலகிய கசப்பான அனுபவங்களை தான், விக்னேஷ் சிவன் இந்த பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login