Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தென் மாவட்ட மக்களுக்கு வாப்ஸ் அப் எண் அறிவிப்பு!

தமிழகம்

தென் மாவட்ட மக்களுக்கு வாப்ஸ் அப் எண் அறிவிப்பு!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை பாதிப்புகளைத் தெரிவிக்க தமிழக அரசு வாட்ஸ்அப் எண்களை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி டிவிட்டர் மற்றும் முகநூல் வழியாகவும் மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 81485 39914 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகளை தெரிவிக்கலாம். சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் @tn_rescuerelief, @tnsdma என்ற பக்கத்திலும், @tnsdma என்ற பேஸ்புக் பக்கத்திலும் மழை பாதிப்பு குறித்து பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top