Connect with us

Raj News Tamil

“எப்ப பாத்தாலும் அதே நினைப்பு” – கணவனை அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற மனைவி!

தமிழகம்

“எப்ப பாத்தாலும் அதே நினைப்பு” – கணவனை அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற மனைவி!

சேலம் மாவட்டம் ஜாகீர்ரெட்டிப் பட்டியில் உள்ள ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ். 35 வயதாகும் இவருக்கு, மணிமேகலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ், குடித்துவிட்டு, தனது மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும், தினமும் உல்லாசத்திற்கு அழைக்கும் அவர், அதற்கு மனைவி ஒத்துக்கொள்ளவில்லை என்றால், வேறொரு நபருடன் தொடர்புபடுத்தி, ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளார். இவ்வாறு தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மது அருந்திவிட்டு, இரவு வீட்டிற்கு வந்துள்ளார் ரமேஷ்.

அப்போது, வழக்கம் போல் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை, கணவன் தூங்கிக் கொண்டு இருக்கும்போது, தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர், அந்த சடலத்தோடு இரவு முழுவதும் இருந்த அவர், காலை விடிந்ததும், காவல்நிலையம் சென்று சரண் அடைந்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ரமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த அவர்கள், மணிமேகலையிடம் விசாரணை நடத்தினர்.

அதில், ரமேஷ் சந்தேகம் கொண்டு தகராறு செய்வது மட்டுமின்றி, செக்ஸ் டார்ச்சலும் கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மது அருந்திவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவி கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top