Connect with us

Raj News Tamil

காதல் திருமணம் செய்த பெண்.. பேசாமல் இருந்த பெற்றோர்.. 3 ஆண்டுகளுக்கு பின் ஷாக் தந்த மகள்..

தமிழகம்

காதல் திருமணம் செய்த பெண்.. பேசாமல் இருந்த பெற்றோர்.. 3 ஆண்டுகளுக்கு பின் ஷாக் தந்த மகள்..

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவரும், அதே பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், கௌசல்யாவின் பெற்றோர் அந்த தம்பதியை பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகாவது, தனது பெற்றோர் வருவார்கள் என்று எதிர்பார்த்த கௌசல்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நீண்ட நேரம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, கௌசல்யா தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top