தமிழகம்
5 லட்சம் மதிப்புள்ள புடவைகளை திருடிய பெண்கள்…வைரலாகும் CCTV காட்சி..!!
சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் சுஷில் பொட்டிக் என்கிற ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த புதன்கிழமை அன்று 7 பெண்கள் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள புடவைகளை வாங்கி இருக்கிறார்கள்.
அப்பொழுது அவர்கள் கூட வந்த பெண்கள் தங்களுடைய புடவைக்குள் ஐந்து லட்சம் மதிப்புள்ள புடவைகளை திருடி சென்றிருக்கிறார்கள். வழக்கம்போல் இரவு கடையை மூடுவதற்கு முன்பாக கடை உரிமையாளர் புடவைகளை சோதனை செய்தபோது பல விலை உயர்ந்த புடவைகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக கடை உரிமையாளர் சி சி டிவி காட்சிகளை பார்த்த பொழுது ஐந்து பெண்கள் தங்களுடைய புடவைகளுக்குள் எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. உடனடியாக ஜவுளி கடை உரிமையாளர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகார் அடிப்படையில் அவர்கள் ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய்க்கு புடவை வாங்கி இருந்தார்கள். அந்த தொலைபேசி எண்ணை காவல்துறையினர் ஆராய்ந்து பார்த்ததில் விஜயவாடா பகுதியில் இந்த நபர்கள் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக சென்னை போலீசார் விஜயவாடா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த பெண்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவைகளை சம்பந்தப்பட்ட ஜவுளி கடைக்கு கொரியர் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீசார் புடவைகளை திருடிய பெண்களை கைது செய்வார்களா என்பது தெரியவில்லை என ஜவுளி கடை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் மதிப்புள்ள புடவைகளை திருடிய பெண்கள்…வைரலாகும் CCTV காட்சி..!!#Saree #theft #chennai #CCTV #rajnewstamil pic.twitter.com/NpMZEySiGR
— Raj News Tamil (@rajnewstamil) November 10, 2023