Connect with us

Raj News Tamil

கஞ்சா போதையில் அட்டகாசம் – இளைஞர் செய்த சேட்டை..

தமிழகம்

கஞ்சா போதையில் அட்டகாசம் – இளைஞர் செய்த சேட்டை..

கன்னியாகுமரி அருகே, கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த இளைஞரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கநகர் அருகே உள்ள வலியவிளை காலணி பகுதியை சேர்ந்தவர் அபீஸ். 21 வயதாகும் இவர், கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிக அளவில் கஞ்சா பயன்படுத்திய அபீஸ், வலியவிளை காலணியில், அட்டகாசம் செய்தார். மேலும், அப்பகுதி வழியாக வருவோரிடமும், செல்வோரிடமும், கத்தியை காட்டி மிரட்டி, அடாவடியில் ஈடுபட்டார்.

இதுமட்டுமின்றி, இவர் செய்யும் அட்டகாசங்களை தடுத்த இளைஞரின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினார்.

இதையடுத்து, அந்த இளைஞர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, அபீஸை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

More in தமிழகம்

To Top