தமிழகம்
“Friend வீட்டுக்கு போறேன்-ம்மா” – பொய் சொல்லிவிட்டு ஆசிரியருடன் சென்ற பெண்! இறுதியில் செம ட்விஸ்ட்!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 32 வயது இளைஞர், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது, இவருக்கும், அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும், பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.
திருமணம் செய்துக் கொள்ள இருவரும் முடிவு எடுத்தனர். ஆனால், அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகததால், இருவரும் காத்திருந்தனர். 18 வயது முடிந்து 19-வது வயது தொடங்கியதும், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இவர்களது காதல் கதையை மாணவியின் தோழிகள் மூலம் அறிந்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அந்த ஆசிரியரையும், மாணவியையும், காவல்நிலையத்திற்கு, காவல்துறையினர் வரவழைத்தனர். அங்கு, தங்களுடன் வந்துவிடும்படி, மாணவியின் பெற்றோர் மன்றாடி கேட்டுக் கொண்டனர். ஆனால், தனது காதலில் உறுதியாக இருந்த அந்த மாணவி, ஆசிரியருடன் தான் செல்வேன் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து, அந்த ஆசிரியருக்கே தங்களது மகளை திருமணம் செய்துக் கொடுக்க அந்த பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், திருமணம் நடக்கும் வரை, தங்களது வீட்டில் தான் மகள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பின், அந்த பெண் தனது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
You must be logged in to post a comment Login