Connect with us

Raj News Tamil

உலக நல்லிணக்க நாள்.. தனியார் கல்லூரி மாணவிகள் ரத்த தானம்..!

தமிழகம்

உலக நல்லிணக்க நாள்.. தனியார் கல்லூரி மாணவிகள் ரத்த தானம்..!

உலக நல்லிணக்க நாளை முன்னிட்டு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.

சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள சோகா இகெதா மகளிர் கல்லூரியின் கௌரவத் தலைவர் டாக்டர் தைசாகு இகெதாவின் 96 ஆம் பிறந்த நாள், உலக நல்லிணக்க நாளாக கொண்டாடப்பட்டது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக சோகா கக்காய் இன்டர்நேஷனலின் இயக்குநர், பாரத் சோகா கக்காயின் கெளரவத் துணைத் தலைவர் ஆகாஷ் அவுச்சி கலந்து கொண்டு, அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்பு அனைத்து மாணவிகளும் ஒன்றிணைந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்பு கல்லூரியில் பயிலும் மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர், ரத்த தானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் சேது குமணன், கல்லூரி செயலாளர் கோகிலம் குமணன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More in தமிழகம்

To Top