Connect with us

Raj News Tamil

சோகமாக இருந்த மாணவன்.. ஏன் என்று கேட்ட ஆசிரியர்கள்.. பெண் டுயூசன் டீச்சர் கொடுத்த தொல்லை.. அதிர்ச்சி..

இந்தியா

சோகமாக இருந்த மாணவன்.. ஏன் என்று கேட்ட ஆசிரியர்கள்.. பெண் டுயூசன் டீச்சர் கொடுத்த தொல்லை.. அதிர்ச்சி..

பெண் குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறதோ, அதே அளவிற்கு, ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகிறது. ஆனால், இதுதொடர்பான போதிய விழிப்புணர்வு, பொதுமக்களிடத்தில் இல்லை என்று தெரிய முடிகிறது. இதேபோன்றதொரு சம்பவம், கேரளாவில் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன், 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். வகுப்பறையிலேயே சிறப்பாக படிக்கக் கூடிய இந்த மாணவனின், மதிப்பெண்கள், கடந்த சில மாதங்களாக குறைந்து வந்துள்ளது. இதுமட்டுமின்றி, எப்போதும் ஜாலியாக இருக்கக் கூடிய இந்த மாணவன், சில நாட்களாகவே, மிகவும் சோகத்துடன் இருந்து வந்துள்ளான்.

இதனை கவனித்த ஆசிரியர்கள், அந்த மாணவனுக்கு கவுன்சிலிங் கொடுக்க முயற்சி செய்தனர். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவலை அந்த மாணவன் கூறியுள்ளான். அதாவது, வீட்டின் அருகே உள்ள டுயூசன் சென்டர் ஒன்றில், அந்த மாணவன் படித்து வந்துள்ளான்.

அங்கு பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவர், அந்த மாணவனுக்கு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண் ஆசிரியரை கைது செய்தனர். 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு, பெண் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை கொடுத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top