இந்தியா
அழுதுக் கொண்டே இருந்த கைக்குழந்தை.. கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்..
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த 15 வயது சிறுமி, பள்ளி ஒன்றில் படித்து வந்தார். செல்போன் பயன்படுத்துவதில் அதிக நேரம் செலவிடும் இவருக்கு, தாக்கூர் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்துள்ளனர்.
இதன்காரணமாக கர்ப்பமாகிய அந்த சிறுமி, இதனை பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல், மறைத்து வைத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் விஷயம் வீட்டிற்கு தெரிந்துவிடும் என்று பயந்த சிறுமி, Youtube பார்த்து, தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆனால், பிறந்த குழந்தை கதறி அழுததால், பெற்றோரிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில், அந்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், அந்த சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்த பார்த்தபோது, ரத்தக்கறை இருந்ததை வைத்து, கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முதலில் மழுப்பலான பதிலை கூறிய அவர், பின்னர் தாய் அதட்டி கேட்ட பிறகு, நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த தாய் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த அவர்கள், அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login