Connect with us

Raj News Tamil

மருத்துவமனைக்கு சென்ற நபர்.. நோட்டமிட்ட மர்ம நபர்கள்.. 21 சவரன் கொள்ளை..

தமிழகம்

மருத்துவமனைக்கு சென்ற நபர்.. நோட்டமிட்ட மர்ம நபர்கள்.. 21 சவரன் கொள்ளை..

திருமங்கலம் அருகே, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 21 சரவண் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், தனது மனைவி அறிவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக, நாகராஜன் தனது மனைவியை மருத்துவமனையில் கவனித்து வந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், வீட்டின் பூட்டை உடைத்து, 21 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top