Connect with us

Raj News Tamil

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள்! – 3 பேர் கைது

தமிழகம்

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள்! – 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 500 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அரவிந்த், நவீன், சதீஷ் மூவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

More in தமிழகம்

To Top