Connect with us

Raj News Tamil

பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை..!

தமிழகம்

பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை..!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘மிக்ஜம்’ புயல் டிசம்பர் 5-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூா் -மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தின் திருவள்ளுரிலும் விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top