Connect with us

Raj News Tamil

தேர்வில் வெற்றி.. இருப்பினும் தற்கொலை செய்த மாணவி.. காரணம் இதுவா?

தமிழகம்

தேர்வில் வெற்றி.. இருப்பினும் தற்கொலை செய்த மாணவி.. காரணம் இதுவா?

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அருகே உள்ள ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. 17 வயதாகும் இவர், சமீபத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தார்.

இந்த தேர்வில், 600-க்கு 435 மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், மதிப்பெண் குறைவாக உள்ளது என்று கூறி, கடந்த சில தினங்களாக, அந்த பெண் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கதறி அழுதுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top