Connect with us

Raj News Tamil

நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

தமிழகம்

நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

திருவள்ளூர் கடம்பத்தூரில் பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகன் டில்லிபாபு. இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கூவம் தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்ற டில்லிபாபு நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் சிலர் ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கிய டில்லிபாபுவை தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் டில்லிபாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரம்பாக்கம் தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர் டில்லிபாபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top