Connect with us

Raj News Tamil

பள்ளியில் கத்திக்குத்து…3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

உலகம்

பள்ளியில் கத்திக்குத்து…3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

சீனாவின் தென்கிழக்கு மாகாணத்தில் உள்ள கிண்டர்கார்டன் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் 3 குழந்தைகள், ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று போலீசார் கூறியுள்ளனர். இது சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in உலகம்

To Top