Connect with us

Raj News Tamil

மது அருந்தி புத்தாண்டை கொண்டாடிய 7ம் வகுப்பு மாணவர்கள்..!

இந்தியா

மது அருந்தி புத்தாண்டை கொண்டாடிய 7ம் வகுப்பு மாணவர்கள்..!

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள அரசு விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 31ம் தேதி இரவு, புத்தாண்டு கொண்டாடுவதற்காக 7ம் வகுப்பு மாணவர்கள் சிலர், விடுதியில் இருந்து வெளியேறி, அந்தப்பகுதியில் புதிதாக கட்டுப்பட்டு வந்த கட்டிடத்திற்கு சென்றனர்.

அங்கு பீர் குடித்து, பிரியாணி சாப்பிட்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தை வீடியோ எடுத்த நபரை மாணவர்கள் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏழாம் வகுப்பு மாணவர்கள் மது அருந்திய இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top