Connect with us

Raj News Tamil

17 வயது சிறுவனை மது அருந்த அழைத்த நண்பர்கள்..பிறகு நடந்த கொடூர சம்பவம்

இந்தியா

17 வயது சிறுவனை மது அருந்த அழைத்த நண்பர்கள்..பிறகு நடந்த கொடூர சம்பவம்

தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள பூங்காவில் 17 வயது சிறுவன் ஒருவரது இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அந்த சிறுவனின் பெயர் விவேக் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விவேக் மீது நண்பர்கள் சிலர் வெறுப்பில் இருந்துள்ளனர். இதனால் அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி விவேக்கை நண்பர் ஒருவர் மது அருந்த சத்புலா பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விவேக் உள்ளே நுழைந்தவுடன் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் விவேக் சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தப்பியோடிய விவேக்கின் நண்பர்களில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top