Connect with us

Raj News Tamil

உறவுக்கு அழைத்த காதலன்.. மறுத்த காதலி.. கத்திரிகோலை வைத்து காதலன் செய்த கொடூரம்..

இந்தியா

உறவுக்கு அழைத்த காதலன்.. மறுத்த காதலி.. கத்திரிகோலை வைத்து காதலன் செய்த கொடூரம்..

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் சிங். 24 வயதான இவரும், இளம்பெண் ஒருவரும், இன்ஸ்டாகிராம் மூலமாக, பழகி வந்துள்ளனர்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இருவரும் லிவிங் டு கெதர் முறையில், ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி அன்று, பிரவீன் தனது காதலியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரை கத்திரிகோலால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, வீட்டை பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 2 நாட்களாக வீடு பூட்டுப் போட்டு கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்றபோது, அந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்து பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, அனுப்பி வைத்தனர்.

பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்கு பிறகு, கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனர்.

தற்போது, பிரவீன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உறவுக்கு மறுத்த காதலியை, காதலன் குத்தி கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top